skip to main | skip to sidebar
  • Home
  • குறிப்புகள்
  • கண்டதும், கேட்டதும்
  • கவிதைகள்
  • நூல் அறிமுகம்
  • படிவம்
  • முகவரிகள்
  • ஹைக்கூ
  • சிறுகதைகள்
  • பொது
வதிலைபிரபா


செய்திகள்

Loading...





பிரித்தானிய, ஈழத்து எழுத்தாளர் கவிஞர். முல்லை அமுதன் பிரித்தானியாவில் ஈழத்து நூல்களின் கண்காட்சிகளை நடாத்துவதில் முழுக்கவனம் செலுத்தி வருகிறார்.

கவிஞர். முல்லை அமுதன்அவர்களின் இயற்பெயர் இரத்தினசபாபதி. மகேந்திரன். இலங்கை, யாழ்ப்பாணம், கல்வியங்காடு இவரது பிறப்பிடம்..புலம் பெயர்ந்து பிரித்தானியாவில் வாழ்ந்து கொண்டிருக்கும் முல்லை அமுதன் பிரித்தானிய, ஈழத்து எழுத்தாளர் ஆவார். பிரித்தானியாவில் ஈழத்து நூல்களின் கண்காட்சிகளை நடாத்துவதில் முழுக்கவனம் செலுத்தி வரும் இவர் 'காற்றுவெளி' என்ற இலக்கிய இதழின் ஆசிரியராகவும் இருக்கிறார்.'காற்றுவெளி' அச்சு இதழாக வந்து, தற்போது இணைய இதழாக வெளிவருகிறது. முல்லை அமுதன் 1980 களில் எழுதத் தொடங்கினார். 1981இல் இவரது முதல் நூலான 'நித்திய கல்யாணி' கவிதை நூல் வெளியானது. இது வரை 12 நூல்கள் வெளியிட்டுள்ளார். ஈழத்து நூல்களை சேகரிப்பதுடன், தொடர்ச்சியாக நூல்கண்காட்சிகளை நடாத்தி, அவற்றை ஆவணப்படுத்தி வரும் இவரால் 10,000 க்கும் அதிகமான நூல்கள், சஞ்சிகைகள் சேகரிக்கப்பட்டுள்ளன. இவற்றுடன் மறைந்த எழுத்தாளர்களின் புகைப்படங்களையும், நினைவுமலர்களையும் சேகரிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
இவரது நூல் கண்காட்சி பற்றி 'பதிவுகள்' இணைய தளத்தில்..

லண்டனில் ஈழத்துத் தமிழ் நூல்களின் கண்காட்சியை மிகுந்த அக்கறையுடனும், பேருழைப்புடனும் நிகழ்த்திவரும் முல்லை அமுதனுக்கு லண்டன் வாழ் தமிழர்கள் நன்றிக்கடன்பட்டிருக்கிறார்கள். இலங்கையிலும் புலம்பெயர் நாடுகளிலும் ஈழத்தமிழர்கள்; வெளியிட்ட பன்னிரண்டாயிரத்துக்கும்; மேற்பட்ட நூல்களை புலம்பெயர்ந்துவாழும் நாடுகளிலிருந்தும், இலங்கையின் பல்வேறு பாகங்களிலும் இருந்தும் முல்லை அமுதன் அரும்பாடுபட்டுத் தேடித் திரட்டி நவம்பர் மாதம் பத்தாம் திகதி ‘இல்போர்ட்’ சென்.லூக்ஸ் தேவாலய மண்டபத்தில் கண்காட்சிக்கு வைத்திருந்தார். பல்வேறு தலைப்புக்களின் கீழ் நூல்கள் பகுதி பகுதியாக பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. இலங்கையிலேயே இவ்வளவு பெருந்தொகை நூல்களை ஒரே கண்காட்சியில் பார்க்க முடியுமா? என்பது சந்தேகமே!
லண்டன் போன்ற தலைநகரில் இத்தகைய ஒரு பிரமிப்பூட்டும் ஈழத்து நூல்களின் கண்காட்சி இடம்பெறுவது எமக்குக் கிடைத்த வரப்பிரசாதம் என்றே கூறவேண்டும்;. அறிவியல், சமயம், வரலாறு, சிறுகதை, கவிதை, நாவல், சமையல், சிறுவர் இலக்கியம்,
விமர்சனம், கட்டுரைகள் ஆகிய பல்வேறு தலைப்புக்களின் கீழ் இலங்கையில் வெளியாகியுள்ள பெருவாரியான நூல்களை பார்க்கும்போது மனதில் மகிழ்ச்சியும் உற்சாகமும் பரவி இருந்ததை உணரமுடிந்தது.

இவ்வளவு பெருந்தொகையான நூல்களை இலங்கையில் இருந்து எழுத்தாளர்களிடமிருந்தும், பதிப்பாளர்களிடமிருந்தம் லண்டனுக்குத் தருவிக்க முல்லை அமுதன் பெரும் கஷ்டங்களை அனுபவித்திருப்பார் என்பதை வலியுறுத்திச் சொல்ல வேண்டியதில்லை. இதனைவிட சைமன் காசிச் செட்டியில் இருந்து டானியல் அன்ரனிவரை மிக அரிதாகவே கிடைக்கக்கூடிய ஈழத்து அறிஞர்கள், எழுத்தாளர்களின் புகைப்படங்களையும் கண்காட்சிக்கு வைத்திருந்தமை இந்த கண்காட்சிக்கு புதிய மெருகு சேர்த்தது எனலாம். காற்று வெளி சஞ்சிகையின் ஆதரவில் இடம்பெற்ற இந்தக் கண்காட்சி முடிவில் நடன நிகழ்ச்சிகளும், இசை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன. 
வெளிவந்த நூல்கள்
நித்திய கல்யாணி (1981)
புதிய அடிமைகள் (1983)
விடியத்துடிக்கும் ராத்திரிகள் (1984)
யுத்தகாண்டம் (1989)
விழுதுகள் மண்ணைத் தொடும் (1993)
ஆத்மா (1994)
விமோசனம் நாளை (1995)
ஸ்நேகம் (1998)
பட்டங்கள் சுமக்கிறான் (1999)
முடிந்த கதை தொடர்வதில்லை (1999)
யாகம் (2000)
இசைக்குள் அடங்காத பாடல்கள் (2002)
பதிப்பித்த நூல்கள் : இலக்கியப்பூக்கள் (2008)
ஓவியா பதிப்பகம் வெளியீடான 'சுதந்திரன் கவிதைகள்' நூல் வெளிவரக் காரணமானவர்.
- நன்றி. 
தமிழ் விக்கிபீடியா
பதிவுகள்.காம்
Posted by Unknown
Email This BlogThis! Share to X Share to Facebook

0 comments:

Post a Comment

Older Post Home
Subscribe to: Post Comments (Atom)
உங்கள் வலைப்பதிவில் vathilaipraba.blogspot.com இணைய இதழுக்கு இணைப்பு செய்திட கீழ்காணும் Script -ஐ Copy செய்து உங்கள் வலைப்பதிவுக்கான Script - ல் தேவையான இடத்தில் Paste செய்தால் போதும்....
<a href="http://www.vathilaipraba.blogspot.com" title="Create animated gif"><img src="http://www.loogix.com/img/res/1/3/0/7/2/4/13072420601084675.gif" alt="Create animated gif"/></a><br/><a href="http://www.vathilaipraba.blogspot.com/"></a>

எமது வலை தளத்தில் இணைப்பு செய்துவரும் வலைப் பதிவர்களுக்கு நன்றி..

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம்

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Vathilai Praba

  • தமிழ்முரசு Tamil Murasu
  • யவ்வனம்
  • SARVADESA TAMILER CENTER
  • காற்றுவெளி இதழ்
  • தி.க.சி
  • ஓவியா பதிப்பகம்
  • நெய்தல்
  • Muthukamalam.com
  • திரட்டி.காம் பதிவுகள்
  • தமிழ்ப் புத்தகம்
வதிலைபிரபா

உலகத்தமிழ்ச் சிற்றிதழ்கள் சங்க 6 -ஆவது மாநாடு - இலங்கை

இலங்கை சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு

Unknown
View my complete profile

Search Box



Highlight 3 'மகாகவி' இதழ்களை முழுமையாக வாசிக்க படத்தின் மீது 'click' செய்யுங்கள்.

Blogger Tips and Tricks
Highlight 2

Posts
Atom
Posts
Comments
Atom
Comments
Literature Blogs
Powered by Blogger.

Recent Comments

© வதிலைபிரபா - Designed by Theme.fm, Google blogs templates by Blog and Web.