skip to main | skip to sidebar
  • Home
  • குறிப்புகள்
  • கண்டதும், கேட்டதும்
  • கவிதைகள்
  • நூல் அறிமுகம்
  • படிவம்
  • முகவரிகள்
  • ஹைக்கூ
  • சிறுகதைகள்
  • பொது
வதிலைபிரபா


செய்திகள்

Loading...





ஹைக்கூ


வடியும் இரவின்
கடைசி துளிகள்
வியர்வை பனிக்குடம்.

நீண்ட நேரமாக
பறக்கும் பறவையொன்று
பறந்து கொண்டிருக்கிறது.

உலர்ந்த மணலில்
உறைந்து கிடந்தவிதை மீது
விழுந்தது மழைத்துளி.

மஞ்சள் வெயிலில் மயங்கி
கிடந்த சாரைப் பாம்பொன்று
ஊர்ந்து செல்கிறது.

உதிரும் சருகில்
தொங்கிக் கொண்டிருக்கிறது
சிலந்திப் பூச்சி.

தகிக்கும் தார்ச்சாலையில்
பதியாத சுவடுகள்
இழுவை மாடு.

புற்களை வெட்டாதீர்கள்
உறங்கிக் கொண்டிருக்கிறது
பனி துளிகள்.

பூக்கள் மலர்கின்றன
வண்ணத்துப் பூச்சிகளை
பிடிக்காதீர்கள்.

கொசு கடித்தபோது
அயர்ந்து உறங்குகிறான்
பிச்சைக்காரன்.

இரவுநேர மழை
வடியும் நீரிடுக்குகளிடையே
கத்துகிற தவளைகள்.

தீட்டப்பட்ட ஓவியம்
உயிர்த்து எழுகிறது
பார்வை விழிகள்.

இரவின் மௌனம்
பகலின் இரைச்சல்
உதிரக் காத்திருக்கும் மலர்.

பூக்களின் தரிசனம்
கண்டு ரசித்தேன்
மலரும் பொக்கைவாய்.

அமாவாசை இரவில்
தொலைந்த நிலா
புழக்கடையில் அக்கா.

ஆழிப் பேரலை
அள்ளிச் சென்றது
சாதி முட்களை.

விழிகளால் பேசி
இதழ்களால் எழுதினான்
ஈர முத்தம்.

முகிழ் விழுது
மழை விழுது
ஆடி பழகு.

வெள்ள அபாயம்
காலியான ஊர்
கதறும் தவளைகள்.

பற்றி எரிகிறது
புதர்க் காடெங்கும்
மோக தீ.

மௌன இரவின்
நிசப்த ஒலிகள்
நீயும் நானும்.

பழைய செருப்பை
உதறி நடந்தான்
கடிக்கும் புது செருப்பு.

காற்றிலாடும்
ஒற்றை இறகு
வானம் வசப்படுமா?

பூக்களோடு
என்ன உரையாடல்?
ரீங்காரமிடும் வண்டுகள்.

கிளையில்லா மரம்
கண்களை உறுத்துகிறது
கூடில்லாப் பறவை.

ருசியில்லை
தூர எரிந்தபோது
பசித்தது வயிறு.

மதுரசத்தில் திளைத்தபோது
இறந்து கிடந்தவன் மீது
மொய்க்கும் வண்டுகள்.

முதல்தட்டில் பொருண்மை
கடைத்தட்டில் பொறுமை
இடைத்தட்டில் வெறுமை.


குழந்தை அழுகிறது
சோறூட்டுகிறாள் தாய்
பட்டாம்பூச்சி படபடக்கிறது.

எது ஹைக்கூ?
சலிப்புடன் அமர்ந்திருக்கிறான்
கோழி கூவுகிறது.


காகங்கள் கரைகின்றன
சோற்றுப் பருக்கைகளைச் சுமந்தபடி
ஊரும் எறும்புகள்..

ஆந்தைகளின் அலறல் 
நிசப்தங்களில் கசிந்திடும் 
ஒற்றை விளக்கொளி..

பூச்சிகளின் பேரிரைச்சல் 
மௌனம் கலைக்கும்
பூக்களின் தரிசனம்.

தொலைந்த வாழ்க்கை
சிதறிய சில்லறைகளை
பொறுக்கும் பிச்சைக்காரன்.

பறவைகளின் பரபரப்பு
இலையுதிர்த்த மரங்களில்  
துளிர்விடும் இலைகள்.
Email This BlogThis! Share to X Share to Facebook
Home
Subscribe to: Posts (Atom)
உங்கள் வலைப்பதிவில் vathilaipraba.blogspot.com இணைய இதழுக்கு இணைப்பு செய்திட கீழ்காணும் Script -ஐ Copy செய்து உங்கள் வலைப்பதிவுக்கான Script - ல் தேவையான இடத்தில் Paste செய்தால் போதும்....
<a href="http://www.vathilaipraba.blogspot.com" title="Create animated gif"><img src="http://www.loogix.com/img/res/1/3/0/7/2/4/13072420601084675.gif" alt="Create animated gif"/></a><br/><a href="http://www.vathilaipraba.blogspot.com/"></a>

எமது வலை தளத்தில் இணைப்பு செய்துவரும் வலைப் பதிவர்களுக்கு நன்றி..

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம்

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Vathilai Praba

  • தமிழ்முரசு Tamil Murasu
  • யவ்வனம்
  • SARVADESA TAMILER CENTER
  • காற்றுவெளி இதழ்
  • தி.க.சி
  • ஓவியா பதிப்பகம்
  • நெய்தல்
  • Muthukamalam.com
  • திரட்டி.காம் பதிவுகள்
  • தமிழ்ப் புத்தகம்
வதிலைபிரபா

உலகத்தமிழ்ச் சிற்றிதழ்கள் சங்க 6 -ஆவது மாநாடு - இலங்கை

இலங்கை சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு

Unknown
View my complete profile

Search Box



Highlight 3 'மகாகவி' இதழ்களை முழுமையாக வாசிக்க படத்தின் மீது 'click' செய்யுங்கள்.

Blogger Tips and Tricks
Highlight 2

Posts
Atom
Posts
All Comments
Atom
All Comments
Literature Blogs
Powered by Blogger.

Recent Comments

© வதிலைபிரபா - Designed by Theme.fm, Google blogs templates by Blog and Web.