மார்ச் 2012 - உலகத்தமிழ்ச் சிற்றிதழ்கள் சங்கம் நடத்தும் 'சர்வதேச சிற்றிதழ்கள் மாநாடு'

Mullaperiyar Dam: The strongest Dam in India

கு.சின்னப்பபாரதி அறக்கட்டளை சிற்றிதழ்களுக்கு விருது வழங்கி பெருமை சேர்க்கிறது!



அன்புடையீர்,
தாங்களும் இப் போட்டியில் பங்கேற்று சிறப்பு செய்ய அன்புடன் அழைக்கிறோம். 
தங்கள் இதழில் இச் செய்தியினைப் பதிவு செய்து, அனைத்துச் சிற்றிதழ்களும் பங்கேற்கச் செய்யுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
  • கு.சின்னப்பபாரதி அறக்கட்டளை விருதுகள் இந்த ஆண்டு முதல் சிற்றிதழ்களுக்கும் வழங்கப் படுகிறது. சிற்றிதழ் மற்றும் நூல்களுக்கும் விருதுகள் வழங்கப்பட உள்ளன. 
  • உலகம் முழுதும் உள்ள இதழாளர்கள் மற்றும் படைப்பாளர்கள் பங்கேற்கலாம். 
  • இந்த ஆண்டு முதல் முதன்மைப்பரிசு ரூ.1½ இலட்சம் (ரூபாய் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம்)வழங்க அறக்கட்டளை முடிவு செய்துள்ளது.  
  • பிற சிறப்புப்பரிசுகள் ஒவ்வொரு துறைக்கு ஒரு பரிசாக ரூபாய் பத்தாயிரம் வீதம் வழங்கப்படவுள்ளது. பணமுடிப்புடன் கேடயமும் சான்றிதழும் வழங்கப்படும்.
2012, அக்டோபர் 2ஆம் நாள், காந்தி பிறந்த நாளன்று இப்பரிசுகள் வழங்கப்படவுள்ளது.
மேலும் விபரங்களுக்கு இணைப்பை 'க்ளிக்' செய்யுங்கள். 

சிறுகதைப் போட்டி



நாவலாசிரியர் கு.சின்னப்பபாரதி அறக்கட்டளையின் இலக்கியப் பரிசளிப்பு விழா நாமக்கல் செல்வம் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.
இதில், சிறந்த நூல்களைப் படைத்த எழுத்தாளர்கள் 23 பேருக்கு ரூ.3.4 லட்சம் மதிப்பிலான பரிசுகள் வழங்கப் பட்டன. கு.சின்னப்பபாரதி அறக்கட்டளையின் தலைவரும், செல்வம் கல்வி நிறுவனங்களின் தாளாளருமான பொ. செல்வராஜ் தலைமை வகித்தார்.
இலங்கை கொழுந்து இதழாசிரியர் அந்தனி ஜீவா, சேலம் கட்டடப் பொறியாளர் எஸ்.பி.  ராமசாமி, பெங்களூர் மென்பொருள் பொறியாளர் எஸ்.கே. சம்பத், ஸ்ரீராம் சிட்ஸ் நிறுவன நாமக்கல் முதல்நிலை மேலாளர் எஸ். ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
          விருதுகளின் நோக்கம் குறித்து எழுத்தாளர் கு. சின்னப்பபாரதி உரையாற்றினார். சிறப்பு விருந்தினராக 'தினமணி' ஆசிரியர் கே. வைத்தியநாதன் பங்கேற்று, எழுத்தாளர்களுக்குப் பரிசு வழங்கிப் பேசினார்.
  'பனிநிலவு' நூலை எழுதிய லண்டனில் வாழும் லண்டனில் வசிக்கும் இலங்கை எழுத்தாளர் வவுணியூர்  இரா. உதயணனுக்கு முதல் பரிசாக ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டது. 
வெளிநாடுவாழ் எழுத்தாளர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த நூல்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் பரிசுத் தொகையாக அளிக்கப்பட்டது.
வி.ஜீவகுமாரன் (டென்மார்க்) - சங்கானைச் சண்டியன்
நாகரத்தினம் கிருஷ்ணா (பிரான்ஸ்)  - மாத்தகரி
சை.பீர்முகமது (மலேசியா) - பெண் குதிரை
நடேசன் (ஆஸ்திரேலியா) - வண்ணத்திகுளம்
தெணியான் (இலங்கை) - ஒடுக்கப்பட்டவர்கள்
கே.விஜயன் - (இலங்கை) - மனநதியின் சிறு அலைகள்
சிவசுப்ரமணியன் (இலங்கை) - சொந்தங்கள்
தனபாலசிங்கம் (இலங்கை) - ஊருக்கு நல்லது சொல்வேன்
கலைச்செல்வன் (இலங்கை) - மனித தர்மம்
உபாலிலீலாரத்னா (இலங்கை) - கு.சி.பா.வின் சுரங்கம், தாகம், நாவல்களின் சிங்கள மொழியாக்கம்
பரிசு பெற்ற தமிழக எழுத்தாளர்கள், நூல்களின் விவரம்:
ஆர்.எஸ்.ஜேக்கப் - பனையண்ணன்,
சுப்ரபாரதி மணியன் -சுப்ரபாரதி மணியன் கதைகள்
மு.இளங்கோவன் - இணையம் கற்போம்
புவலர். ராசகண்ணையன் - குறளோசை
ப.ஜீவகாருண்யன் - கவிச்சக்ரவர்த்தி
குறிஞ்சிவேலன் - முழுமையைத் தேடும் முழுமையற்ற புள்ளிகள்
லேனா தமிழ்வாணன் - ஒரு பக்கக் கட்டுரை 500
வெண்ணிலா - நீரில் அலையும் முகம்
பூங்குருநல் அசோகன் - குமரமங்கலம் தியாக தீபங்கள்
கூத்தங்குடி அழகு ராமானுஜன் - காவிரி மண்ணின் நேற்றைய மனிதர்கள்
வாழ்நாள் சாதனை, கொடைச்சிறப்பு விருதுகள்:
தமிழ் மொழிபெயர்ப்புக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது - மயிலை பாலு
தமிழ் - ஹிந்தி மொழியாக்கத்துக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது - எச். பாலசுப்ரமணியம், தில்லி.
இலக்கியக் கொடைச்சிறப்பு விருது - புரவலர் ஹாசிம் உமர், இலங்கை.
          விழாவில், எச்.பாலசுப்ரமணியம் ஹிந்தியில் மொழியாக்கம் செய்த 'பனி நிலவு', உபாலி லீலாரத்னா சிங்களத்தில் மொழியாக்கம் செய்த 'தாகம்', 'இந்திய இலக்கியத்திற்கு கு.சின்னப்பபாரதியின் பங்களிப்பு' ஆகிய நூல்கள் வெளியிடப்பட்டன.
          அறக்கட்டளைச் செயலர் கா. பழனிசாமி, துணைத்தலைவர் சி.க. கருப்பண்ணன், உறுப்பினர் சி. ரங்கசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பிரித்தானிய, ஈழத்து எழுத்தாளர் கவிஞர். முல்லை அமுதன்

பிரித்தானியாவில் ஈழத்து நூல்களின் கண்காட்சிகளை நடாத்துவதில் முழுக்கவனம் செலுத்தி வருகிறார்.
கவிஞர். முல்லை அமுதன்அவர்களின் இயற்பெயர் இரத்தினசபாபதி. மகேந்திரன். இலங்கை, யாழ்ப்பாணம், கல்வியங்காடு இவரது பிறப்பிடம்..புலம் பெயர்ந்து பிரித்தானியாவில் வாழ்ந்து கொண்டிருக்கும் முல்லை அமுதன் பிரித்தானிய, ஈழத்து எழுத்தாளர் ஆவார். பிரித்தானியாவில் ஈழத்து நூல்களின் கண்காட்சிகளை நடாத்துவதில் முழுக்கவனம் செலுத்தி வரும் இவர் 'காற்றுவெளி' என்ற இலக்கிய இதழின் ஆசிரியராகவும் இருக்கிறார்.'காற்றுவெளி' அச்சு இதழாக வந்து, தற்போது இணைய இதழாக வெளிவருகிறது. முல்லை அமுதன் 1980 களில் எழுதத் தொடங்கினார். 1981இல் இவரது முதல் நூலான 'நித்திய கல்யாணி' கவிதை நூல் வெளியானது. இது வரை 12 நூல்கள் வெளியிட்டுள்ளார். ஈழத்து நூல்களை சேகரிப்பதுடன், தொடர்ச்சியாக நூல்கண்காட்சிகளை நடாத்தி, அவற்றை ஆவணப்படுத்தி வரும் இவரால் 10,000 க்கும் அதிகமான நூல்கள், சஞ்சிகைகள் சேகரிக்கப்பட்டுள்ளன. இவற்றுடன் மறைந்த எழுத்தாளர்களின் புகைப்படங்களையும், நினைவுமலர்களையும் சேகரிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
இவரது நூல் கண்காட்சி பற்றி 'பதிவுகள்' இணைய தளத்தில்..

லண்டனில் ஈழத்துத் தமிழ் நூல்களின் கண்காட்சியை மிகுந்த அக்கறையுடனும், பேருழைப்புடனும் நிகழ்த்திவரும் முல்லை அமுதனுக்கு லண்டன் வாழ் தமிழர்கள் நன்றிக்கடன்பட்டிருக்கிறார்கள். இலங்கையிலும் புலம்பெயர் நாடுகளிலும் ஈழத்தமிழர்கள்; வெளியிட்ட பன்னிரண்டாயிரத்துக்கும்; மேற்பட்ட நூல்களை புலம்பெயர்ந்துவாழும் நாடுகளிலிருந்தும், இலங்கையின் பல்வேறு பாகங்களிலும் இருந்தும் முல்லை அமுதன் அரும்பாடுபட்டுத் தேடித் திரட்டி நவம்பர் மாதம் பத்தாம் திகதி ‘இல்போர்ட்’ சென்.லூக்ஸ் தேவாலய மண்டபத்தில் கண்காட்சிக்கு வைத்திருந்தார். பல்வேறு தலைப்புக்களின் கீழ் நூல்கள் பகுதி பகுதியாக பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. இலங்கையிலேயே இவ்வளவு பெருந்தொகை நூல்களை ஒரே கண்காட்சியில் பார்க்க முடியுமா? என்பது சந்தேகமே!
லண்டன் போன்ற தலைநகரில் இத்தகைய ஒரு பிரமிப்பூட்டும் ஈழத்து நூல்களின் கண்காட்சி இடம்பெறுவது எமக்குக் கிடைத்த வரப்பிரசாதம் என்றே கூறவேண்டும்;. அறிவியல், சமயம், வரலாறு, சிறுகதை, கவிதை, நாவல், சமையல், சிறுவர் இலக்கியம்,
விமர்சனம், கட்டுரைகள் ஆகிய பல்வேறு தலைப்புக்களின் கீழ் இலங்கையில் வெளியாகியுள்ள பெருவாரியான நூல்களை பார்க்கும்போது மனதில் மகிழ்ச்சியும் உற்சாகமும் பரவி இருந்ததை உணரமுடிந்தது.

இவ்வளவு பெருந்தொகையான நூல்களை இலங்கையில் இருந்து எழுத்தாளர்களிடமிருந்தும், பதிப்பாளர்களிடமிருந்தம் லண்டனுக்குத் தருவிக்க முல்லை அமுதன் பெரும் கஷ்டங்களை அனுபவித்திருப்பார் என்பதை வலியுறுத்திச் சொல்ல வேண்டியதில்லை. இதனைவிட சைமன் காசிச் செட்டியில் இருந்து டானியல் அன்ரனிவரை மிக அரிதாகவே கிடைக்கக்கூடிய ஈழத்து அறிஞர்கள், எழுத்தாளர்களின் புகைப்படங்களையும் கண்காட்சிக்கு வைத்திருந்தமை இந்த கண்காட்சிக்கு புதிய மெருகு சேர்த்தது எனலாம். காற்று வெளி சஞ்சிகையின் ஆதரவில் இடம்பெற்ற இந்தக் கண்காட்சி முடிவில் நடன நிகழ்ச்சிகளும், இசை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன. 
வெளிவந்த நூல்கள்
நித்திய கல்யாணி (1981)
புதிய அடிமைகள் (1983)
விடியத்துடிக்கும் ராத்திரிகள் (1984)
யுத்தகாண்டம் (1989)
விழுதுகள் மண்ணைத் தொடும் (1993)
ஆத்மா (1994)
விமோசனம் நாளை (1995)
ஸ்நேகம் (1998)
பட்டங்கள் சுமக்கிறான் (1999)
முடிந்த கதை தொடர்வதில்லை (1999)
யாகம் (2000)
இசைக்குள் அடங்காத பாடல்கள் (2002)
பதிப்பித்த நூல்கள் : இலக்கியப்பூக்கள் (2008)
ஓவியா பதிப்பகம் வெளியீடான 'சுதந்திரன் கவிதைகள்' நூல் வெளிவரக் காரணமானவர்.
- நன்றி. 
தமிழ் விக்கிபீடியா
பதிவுகள்.காம்

கல்வி விழா

வத்தலக்குண்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கல்விவிழாவில், ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர் திரு. இரா. பரமசிவன் - திருமதி. இராஜம்மாள் இவர்கள் நினைவாக, பள்ளி அளவில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற பள்ளி மாணவர்களுக்கு ரூ.6000/- வழங்கப்பட்டது. 
 கல்வி விழாவுக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் ஜெ. நாகராஜன் தலைமை தாங்கினார். முன்னதாக தியாகி. மீனாட்சி சுந்தரம் தேசியக்கொடி ஏற்றினார். தமிழ் ழகரப் பணிமன்றச் செயலாளர் ராசாமணி என்ற எழிலரசு அறிமுக உரை நிகழ்த்தினார். 
விழாவில் 'வாழை' இதழ் ஆசிரியர் வாழைகுமார், தனலெட்சுமி புக் ஸ்டால் உரிமையாளர் பிரபாகரன், கணேஷ் பிரஸ் உரிமையாளர் கணேசன், ரவிச்சந்திரன், சூரியன் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர். 
சென்ற ஆண்டு 10 -ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் பள்ளி அளவில் முதலிடம் பெற்ற மாணவன் P விக்ரம் -க்கு ரூ. 3000/-, பள்ளி அளவில் 2 -ஆம் பெற்ற மாணவன்  B ராஜதுரைக்கு ரூ. 2000/-, பள்ளி அளவில் 3 -ஆம் பெற்ற மாணவன்  K  மோகன்குமாருக்கு ரூ. 1000/- ஆக மொத்தம் ரூ. 6000/- த்தை ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர் திரு. இரா. பரமசிவன் - திருமதி. இராஜம்மாள் இவர்களின் மகனும், உலகத்தமிழ்ச் சிற்றிதழ்கள் சங்கத்தின் தலைவருமான கவிஞர். வதிலைபிரபா தமது குடும்பத்தின் சார்பாகவும், தமது சகோதரர் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வசிக்கும் மென்பொருள் பொறியாளர் திரு. பரமசிவன் சரவணன் சார்பாகவும் வழங்கினார். 
விழாவில் பேசும்போது, ஆண்டுதோறும் மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக கல்விவிழா நடத்தி, மாணவர்களின் கல்வி நலனுக்காக தம்மை அர்ப்பணித்த தமது தந்தையார் ஓய்வுபெற்ற ஆசிரியர் திரு. இரா. பரமசிவன் - தாயார் திருமதி. இராஜம்மாள் இவர்கள் நினைவாக மாணவர்களுக்கு கல்வி ஊக்கப் பரிசு வழங்கப்படும் என வதிலைபிரபா தெரிவித்தார். 

புத்தகத் திருவிழா

தனலட்சுமி புக் ஸ்டால் 
ஓவியா பதிப்பகம்
தமிழ்நாடு பதிப்பாளர் சங்கம் 
இணைந்து நடத்தும்..
 
திண்டுக்கல் மாவட்டம், நிலக் கோட்டை தாலுகா வத்தலக் குண்டு நகரில் தமிழ்நாடு பதிப்பாளர் சங்கம், தனலட்சுமி புக் ஸ்டால் மற்றும் ஓவியா பதிப்பகம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்த மாபெரும் புத்தகத் திருவிழா காந்திநகர் மெயின் ரோடு தனலட்சுமி டூவீலர் ஸ்டாண்டில் தொடங்கியது. இந்த புத்தகத் திருவிழா 23 நாட்கள் நடைபெறுகிறது.
முன்னதாக ஓவியா பதிப்பக உரிமையாளரும், உலகத் தமிழ்ச் சிற்றிதழ்கள் சங்க தலைவருமான கவிஞர். வதிலைபிரபா வரவேற்புரை நிகழ்த்தி, நிகழ்ச்சியை தொகுத்தும் வழங்கினார். வத்தலகுண்டு பேரூராட்சித் தலைவர் ராசாத்தி மெர்சி குத்துவிழக்கேற்றி தொடக்கி வைத்து, நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். மகாலட்சுமி பெண்கள் மேனிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சண்முகநாத பாண்டியன் முதல் விற்பனையை தொடங்கி வைக்க சந்தோஸ் கேஸ் ஏஜென்சி உரிமையாளர் க. தங்கவேலு மற்றும் கொடைரோடு ஸ்ரீ. ஹயகிரீவர் கலை அறிவியல் கல்லூரி சேர்மன் மாரிக்கண்ணன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். 
பட்டிமன்ற நடுவர் முல்லைநடவரசு, தமிழ் ழகரப் பணிமன்ற செயலாளர் ராசாமணி என்ற எழிலரசு, சுதந்திரப் போராட்ட வீரர் மீனாட்சி சுந்தரம், குறிஞ்சி ரியல் எஸ்டேட் உரிமையாளர் தேவாரம் முருகன், செனார்டு தொண்டு நிறுவன டைரக்டர் மு. தங்கவேலு, திண்டுக்கல் மாவட்ட பெற்றோர் ஆசிரிய சங்க தலைவர் பொன். அண்ணாத்துரை, அய்யன் திருவள்ளுவர் இலக்கியப் பேரவை தலைவர் சூரியன், காந்தி நகர் குடியிருப்போர் நலச் சங்க தலைவர் ஜெகநாதன் அரசு மேனிலைப்பள்ளி தலைமை ஆசிரியை ஜெயலட்சுமி ஆகியோர் சிறப்புரை வழங்கினர்.
விழாவில் பண்ணைக்காடு வீரம்மாள் பரமசிவம் கல்லூரி தாளாளர் பி. சுப்பிரமணி, மகாலட்சுமி பெண்கள் மேனிலைப்பள்ளி தாளாளர் இராமதாஸ் கலந்துகொண்டனர். முடிவில் தனலட்சுமி புக் ஸ்டால் உரிமையாளர் பிரபாகரன் நன்றி கூறினார். 
16 பதிப்பகங்களின் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூல்கள் இடம்பெற்றன. 
லட்சக்கணக்கான நூல்களின் அணிவகுப்பு பார்ப்பவர்களை பிரமிக்கச் செய்தது.  வத்தலகுண்டு நகரில் இதுவரை கண்டிராத புத்தகத் திருவிழா இது. 
தினமும் நூற்றுக்கணக்கான பார்வையாளர்களின் அணிவகுப்பு அரங்கில் நிரம்பி வழிகிறது. பள்ளி மாணவர்களின் வருகை கலகலப்பூட்டுகிறது. வத்தலகுண்டு பகுதியில் விற்பனையில் புதிய சாதனையை ஏற்படுத்தி இருக்கிறது. 
13-07-2011 அன்று மணிவிழா கண்ட மணிவிழா நாயகர் முருகபூபதி அவர்கள் தமிழ்நாட்டின் பிரபல எழுத்தாளர்கள் தொ.மு. பாச்கரத்தொன்டமான் (முன்னாள் பாளயங்கோட்டை கலெக்டர்), மொழிபெயர்ப்பாளர், விமர்சகர், பாரதி இயல் ஆய்வாளர் தொ.மு.சி. ரகுநாதன் (சாந்தி இதழாசிரியர்) ஆகியோரின் இரத்த உறவினர். இவர்கள் முருகபூபதியின் பாட்டன்மார். முருகபூபதியின் தந்தை லெட்சுமணன் 1944 -இல் இலங்கை சென்று அங்கேயே நிரந்தரமாகி 1983 -இல் மறைந்தார். திரு. முருகபூபதிக்கு தமிழக உறவினர்களுடனும், எழுத்தாளர்களுடன் உறவும், தொடர்பும் நீடிக்கிறது.
திரு. முருகபூபதியின் 'பாட்டி சொன்ன கதைகள்' (1997) நூல் சிறுவர் இலக்கிய வரிசையில் தேர்வாகி தமிழ்நாட்டில் சுமார் 1500 ஆரம்ப பாடசாலைகளின் நூலகங்களுக்கு விநியோகப்பட்டுள்ளன.
முருகபூபதியின் 'பறவைகள்' (2001) நாவலை தஞ்சாவூர் பல்கலைக்கழக மாணவி நர்கீஸ் என்பவர் தமது M.Phil., பட்டத்திற்காக ஆய்வு செய்துள்ளார். 
வெளியான நூல்கள்:
  1. சுமையின் பங்காளிகள் (சிறுகதை ) - 1975  (சாகித்திய விருது பெற்றது)
  2. சமாந்தரங்கள்  ( ‘’   ‘’ ) -1988
  3. சமதர்மப் பூங்காவில் (சோவியத் பயணக்கதை) - 1989
  4. நெஞ்சில் நிலைத்த நெஞ்சங்கள் ( கட்டுரை ) - 1995
  5. பாட்டி சொன்ன கதைகள்  (சிறுவர் இலக்கியம்) - 1997
  6. சந்திப்பு (நேர்காணல்) - 1998
  7. வெளிச்சம் (சிறுகதை) - 1998
  8. எங்கள் தேசம் ( ‘’   ‘’ ) - 2000
  9. இலக்கிய மடல் (கட்டுரை ) -2001
  10. கடிதங்கள் (கடித இலக்கியம்) - 2001
  11. மல்லிகை ஜீவா நினைவுகள் ( கட்டுரை ) - 2001
  12. பறவைகள் (நாவல் ) - 2001 (சாகித்திய விருது)
  13. எம்மவர்  (கட்டுரை ) - 2003
  14. அம்பி வாழ்வும் பணியும் (ஆய்வு ) - 2003
  15. ராஜஸ்ரீகாந்தன் நினைவுகள் (கட்டுரை) - 2005
  16. கங்கை மகள் (சிறுகதை ) - 2005
  17. நினைவுக்கோலங்கள் ( ‘’   ‘’  ) - 2006
வெளிவரவுள்ள நூல்கள்
  • உள்ளும் புறமும்.
  • காலமும் கணங்களும்
  • சொல்ல மறந்த கதைகள்.
தொகுப்பு ஆசிரியராகவிருந்து பதிப்பித்த மலர் - நூல்கள்:
  • நம்மவர் ; (மலர் )
  • உயிர்ப்பு ( அவுஸ்திரேலியா தமிழ் எழுத்தாளர்களின் கதைத்தொகுப்பு)
  • வானவில் ( அவுஸ்திரேலியா தமிழ் எழுத்தாளர்களின் கவிதைத்தொகுப்பு)
  • Being Alive (அவுஸ்திரேலியா தமிழ் எழுத்தாளர்களின் கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு தொகுப்பு)
  • ர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டு சிறப்பு மலர்
  • ர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டு கட்டுரைக்கோவை.
 பெற்ற விருதுகள்
  • சுமையின் பங்காளிகள் சிறுகதைத்தொகுதிக்காக 1976 ஆம் ஆண்டு    இலங்கை அரசின் தேசிய சாகித்திய விருது.
  • பறவைகள் நாவலுக்காக 2002 ஆம் ஆண்டு இலங்கை அரசின் தேசிய சாகித்திய விருது.
  • அவுஸ்திரேலியா விக்ரோரியா மாநில ஈழத்தமிழ்ச்சங்கம் 1998 இல் வழங்கிய மகத்தான இலக்கியப்பணிக்கான விருது.
  • அவுஸ்திரேலியா தினமன்று (Australia Day) விக்ரோரியா மாநில டெரபின் மாநகர சபை வழங்கிய 2002 ஆம் ஆண்டிற்கான சிறந்த பிரஜைக்கான விருது.
  • அவுஸ்திரேலியா மெல்பன் தமிழ்ச்சங்கம் 2004 இல் வழங்கிய ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர; விருது.
  • இலங்கை நீர;கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லுhரியின் பொன்விழாவை முன்னிட்டு 2004 இல் வழங்கப்பட்ட முதல் மாணவனுக்கான விருது.
(குறிப்பு : குறிப்பிட்ட பாடசாலை விவேகானந்த வித்தியாலயம் என்றபெயரில் 1954 இல் தோன்றியபோது முதலாவது மாணவனாகச் சேர்த்துக்கொள்ளப் பட்டார். 1963 வரையில் அங்கு கற்றபின்பு புலமைப்பரிசில் சித்தியடைந்து யாழ்ப்பாணம் சென்று யாழ். ஸ்ரான்லி கல்லூரியில் ( இன்றைய கனகரத்தினம் மத்திய கல்லூரி) கற்றார்
இலங்கையில் முருகபூபதி அங்கம் வகித்த அமைப்புகள்:
  1. நீர்கொழும்பு இலக்கிய வட்டம் ( ஸ்தாபகர் - முன்னாள் செயலாளர் )
  2. நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி பழைய மாணவர் மன்றம் (ஸ்தாபகர்- முன்னாள் செயலாளர் )  
  3. நீர்கொழும்பு இந்து இளைஞர் மன்றம் (ஆயுள்கால உறுப்பினர் - முன்னாள்   செயலாளர்)
  4. இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் (தேசியசபை உறுப்பினர; கொழும்புக் கிளையின் முன்னாள் செயலாளர்)
  5. பிரதம அமைப்பாளர் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு 2011 (கொழும்பு, இலங்கை)
அவுஸ்திரேலியாவில் முருகபூபதி அங்கம் வகித்த அமைப்புகள்.
  1. ஸ்தாபக உறுப்பினர், அவுஸ்திரேலியா தமிழ் அகதிகள் கழகம்.
  2. ஸ்தாபக உறுப்பினர், அவுஸ்திரேலியாவில் 24 வருடகாலமாக இயங்கும் இலங்கை மாணவர்; கல்வி நிதியம். (இதன் தற்போதைய துணை நிதிச்செயலாளர்;.)
  3. ஸ்தாபக உறுப்பினர்; அவுஸ்திரேலியா தமிழர் ஒன்றியம்.
  4. ஸ்தாபக உறுப்பினர்; அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் (இச்சங்கம் அவுஸ்திரேலியாவில் தொடர்ச்சியாக தமிழ் எழுத்தாளர் விழாவை வருடந்தோறும் நடத்திவருகிறது).
  5. ஸ்தாபக உறுப்பினர் சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியம்.
அவுஸ்திரேலியாவில் முருகபூபதி அங்கம் வகித்த தமிழ் இதழ்கள்.
  • மக்கள் குரல்
  • அவுஸ்திரேலிய முரசு
  • உதயம் ( கடந்த 14 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து வெளியாகிய உதயம் இருமொழி (தமிழ்-ஆங்கிலம்) மாத பத்திரிகையில் துணை ஆசிரியர். (தற்போது இந்த இதழ்கள் நின்றுவிட்டன.)
இதுவரையில் பயணித்து தமது பயண இலக்கிய படைப்புகளில் பதிவு செய்த நாடுகள்:
இந்தியா (தமிழ்நாடு), சோவியத்நாடு (மாஸ்கோ), அவுஸ்திரேலியா, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், மலேசியா, கனடா, கியூபா, இங்கிலாந்து, துபாய்.

தங்களைப் பற்றியும், இந்தத் தளம் பற்றியும் தங்களின் பதிவை அவசியம் எதிர்பார்க்கிறோம்..

உங்கள் வலைப்பதிவில் vathilaipraba.blogspot.com இணைய இதழுக்கு இணைப்பு செய்திட கீழ்காணும் Script -ஐ Copy செய்து உங்கள் வலைப்பதிவுக்கான Script - ல் தேவையான இடத்தில் Paste செய்தால் போதும்....
<a href="http://www.vathilaipraba.blogspot.com" title="Create animated gif"><img src="http://www.loogix.com/img/res/1/3/0/7/2/4/13072420601084675.gif" alt="Create animated gif"/></a><br/><a href="http://www.vathilaipraba.blogspot.com/"></a>

எமது வலை தளத்தில் இணைப்பு செய்துவரும் வலைப் பதிவர்களுக்கு நன்றி..
 
© 2009 VATHILAIPRABA. All Rights Reserved | Powered by Blogger
Design by psdvibe | Bloggerized By LawnyDesignz