இலங்கை கொழுந்து இதழாசிரியர் அந்தனி ஜீவா, சேலம் கட்டடப் பொறியாளர் எஸ்.பி. ராமசாமி, பெங்களூர் மென்பொருள் பொறியாளர் எஸ்.கே. சம்பத், ஸ்ரீராம் சிட்ஸ் நிறுவன நாமக்கல் முதல்நிலை மேலாளர் எஸ். ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விருதுகளின் நோக்கம் குறித்து எழுத்தாளர் கு. சின்னப்பபாரதி உரையாற்றினார். சிறப்பு விருந்தினராக 'தினமணி' ஆசிரியர் கே. வைத்தியநாதன் பங்கேற்று, எழுத்தாளர்களுக்குப் பரிசு வழங்கிப் பேசினார்.
'பனிநிலவு' நூலை எழுதிய லண்டனில் வாழும் லண்டனில் வசிக்கும் இலங்கை எழுத்தாளர் வவுணியூர் இரா. உதயணனுக்கு முதல் பரிசாக ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டது.
வெளிநாடுவாழ் எழுத்தாளர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த நூல்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் பரிசுத் தொகையாக அளிக்கப்பட்டது.
வி.ஜீவகுமாரன் (டென்மார்க்) - சங்கானைச் சண்டியன்
நாகரத்தினம் கிருஷ்ணா (பிரான்ஸ்) - மாத்தகரி
சை.பீர்முகமது (மலேசியா) - பெண் குதிரை
நடேசன் (ஆஸ்திரேலியா) - வண்ணத்திகுளம்
தெணியான் (இலங்கை) - ஒடுக்கப்பட்டவர்கள்
கே.விஜயன் - (இலங்கை) - மனநதியின் சிறு அலைகள்
சிவசுப்ரமணியன் (இலங்கை) - சொந்தங்கள்
தனபாலசிங்கம் (இலங்கை) - ஊருக்கு நல்லது சொல்வேன்
கலைச்செல்வன் (இலங்கை) - மனித தர்மம்
உபாலிலீலாரத்னா (இலங்கை) - கு.சி.பா.வின் சுரங்கம், தாகம், நாவல்களின் சிங்கள மொழியாக்கம்
பரிசு பெற்ற தமிழக எழுத்தாளர்கள், நூல்களின் விவரம்:
ஆர்.எஸ்.ஜேக்கப் - பனையண்ணன்,
சுப்ரபாரதி மணியன் -சுப்ரபாரதி மணியன் கதைகள்
மு.இளங்கோவன் - இணையம் கற்போம்
புவலர். ராசகண்ணையன் - குறளோசை
ப.ஜீவகாருண்யன் - கவிச்சக்ரவர்த்தி
குறிஞ்சிவேலன் - முழுமையைத் தேடும் முழுமையற்ற புள்ளிகள்
லேனா தமிழ்வாணன் - ஒரு பக்கக் கட்டுரை 500
வெண்ணிலா - நீரில் அலையும் முகம்
பூங்குருநல் அசோகன் - குமரமங்கலம் தியாக தீபங்கள்
கூத்தங்குடி அழகு ராமானுஜன் - காவிரி மண்ணின் நேற்றைய மனிதர்கள்
வாழ்நாள் சாதனை, கொடைச்சிறப்பு விருதுகள்:
தமிழ் மொழிபெயர்ப்புக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது - மயிலை பாலு
தமிழ் - ஹிந்தி மொழியாக்கத்துக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது - எச். பாலசுப்ரமணியம், தில்லி.
இலக்கியக் கொடைச்சிறப்பு விருது - புரவலர் ஹாசிம் உமர், இலங்கை.
விழாவில், எச்.பாலசுப்ரமணியம் ஹிந்தியில் மொழியாக்கம் செய்த 'பனி நிலவு', உபாலி லீலாரத்னா சிங்களத்தில் மொழியாக்கம் செய்த 'தாகம்', 'இந்திய இலக்கியத்திற்கு கு.சின்னப்பபாரதியின் பங்களிப்பு' ஆகிய நூல்கள் வெளியிடப்பட்டன.
அறக்கட்டளைச் செயலர் கா. பழனிசாமி, துணைத்தலைவர் சி.க. கருப்பண்ணன், உறுப்பினர் சி. ரங்கசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.