skip to main | skip to sidebar
  • Home
  • குறிப்புகள்
  • கண்டதும், கேட்டதும்
  • கவிதைகள்
  • நூல் அறிமுகம்
  • படிவம்
  • முகவரிகள்
  • ஹைக்கூ
  • சிறுகதைகள்
  • பொது
வதிலைபிரபா


செய்திகள்

Loading...





ஊடகங்களின் உளவியல் யுத்தத்தை சிற்றிதழ்கள் தகர்க்க வேண்டும்: எழுத்தாளர் தி.க.சிவசங்கரன்

பெரும்பான்மை அச்சுஊடகங்களும், காட்சி ஊடகங்களும் மக்களின் பண்பாட்டைச் சீரழிக்கும் உளவியல் யுத்தத்தை நடத்திக் கொண்டிருக்கும் போது, கொள்கைப் பிடிப்புள்ள சிற்றிதழ்கள் சிற்றுளிகளாகி, அந்த மலைகளைத் தகர்க்க வேண்டும் என, சாகித்தியஅகாதெமி விருதுபெற்ற எழுத்தாளர் தி.க.சிவசங்கரன் வலியுறுத்தினார்.
     குற்றாலத்தில் 21-02-2010 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உலகத் தமிழ்ச் சிற்றிதழ்கள் சங்க 5-வது மாநாட்டில் "பாரதி இலக்கிய விருது" பெற்ற அவரது ஏற்புரை:
     தமிழ் தேசியத்தை ஆதரிக்காத எவரையும் நேர்மையான எழுத்தாளர் களாகக் கருத முடியாது. தமிழ் மற்றும் தேசியம் பேசும் தினமணி மாதிரியான பெரிய பத்திரிகைகளுடன் இணைந்து சிறு பத்திரிகைகள் இயங்க வேண்டும். சிறு பத்திரிகைகள் இயக்கம் முன்னேற வேண்டும் என்றால் பெரிய பத்திரிகைகளின் ஆதரவு தேவை. பாரதியாரும், பாரதிதாசனும் காட்டிய வழியில் தினமணி மட்டுமே பயணித்துக் கொண்டிருக்கிறது. கார்ப்பரேட் கலாசாரம் தீவிரமாக வளர்க்கப்படும் இன்றைய சூழலில் சிறு பத்திரிகை களின் கொள்கை நெறியும், போக்கும் பாரதிதாசன் பாதையில் இருக்க வேண்டும். மனிதநேயமிக்க அழகியல், அறிவியல், அறவியல் என இம் மூன்றையும் ஒருங்கிணைத்து புதிய படைப்புகளை வெளியிடுவதும், படைப்பதுமான பணிகளைச் செய்வதே இன்றைய காலத்தின் கட்டாயமாகும்.
     நமது ஊனோடும், உயிரோடும் கலந்தது தமிழ் தேசியம். இந்தக் குரலை அடக்கி ஒடுக்குவதற்கும், தவறானவழியில் திசை திருப்புவதற்கும் பெரும் பான்மை அச்சு ஊடகங்களும், காட்சி ஊடகங்களும், சில சக்திகளும் வரிந்து கட்டிக்கொண்டு செயல்படுகின்றன. அவை மக்களின் பண்பாட்டைச் சீரழிக்கும் ஓர் உளவியல் யுத்தத்தை நடத்திக் கொண்டிருக்கின்றன. இதில் தரமான எழுத்தாளர்களும், படைப்பாளிகளும்கூட பலிகடா ஆகப் போகின்றனர். எனவே, கொள்கைப் பிடிப்புள்ள சிற்றிதழ்கள், சிற்றுளிகளாகி அந்த மலைகளைத் தகர்க்க வேண்டும்.
     அதேவேளையில், சிற்றிதழ்களுக்கு நல்ல படைப்புகளத் தந்துகொண்டே இருக்க வேண்டும் என்ற கொள்கைப் பிடிப்பு படைப்பாளிகளுக்கும் இருக்க வேண்டும். அறிமுகப் படைப்பாளிகள், இளைஞர்கள், மாணவர்களுக்கு சிற்றிதழ்களே நாற்றங்காலாகவும், நடைவண்டியாகவும் இருக்கின்றன, இதில் பயிற்சிபெற்றவர்கள் பின்னாளில் தரமான படைப்பாளிகளாக உருவாகின் றனர். பாரதி முதல் புதுமைப்பித்தன் முதலான மாபெரும் எழுத்தாளர்களும், கவிஞர்களும் சிற்றிதழ்களால் வளர்ந்தவர்கள்தான் என்றார் தி.க.சி.
இலங்கை எழுத்தாளர் அந்தனிஜீவா: உலகத் தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டை நடத்த வேண்டும். அடுத்த ஆண்டு ஜனவரியில் இலங்கையில் அத்தகைய ஒரு மாநாட்டை நடத்தவும், அதற்கு தமிழக எழுத்தாளர்களை அழைக்கவும் திட்டமிட்டுள்ளோம். எழுத்தாளர்களும், தினமணி பத்திரிகையும் ஆதரவு அளிக்க வேண்டும்.
பூ. திருமாறன்: சிற்றிதழ்களில் கொலை இல்லை, ரத்தம் இல்லை. உங்களை அறியாமலேயே இந்த சமுதாயத்திற்கு ஒரு சேவை செய்து வருகிறீர்கள். சிற்றிதழ்களுக்கு ஒரு நல்ல காலம் வரும்.
எழுத்தாளர் கழனியூரன்: எதில் எழுதுகிறோம் என்பது முக்கியமல்ல. என்ன எழுதுகிறோம் என்பதுதான் முக்கியம். நல்ல எழுத்துகள் பேசப்படும். அறிவியல் நம்மை வேறுஒரு தளத்திற்கு அழைத்துச்சென்று கொண்டிருக் கிறது. இணையதளம் என்ற அந்த அறிவியல் முன்னேற்றத்தை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இணையதள சிற்றிதழ்களையும் நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
கவிஞர் கலாப்பிரியா: தி.க.சி.யை ஏற்றுக் கொண்டவர்கள் ஏராளம். அவரிடம் பயின்றவர்களும் ஏராளம். அவர் தனது கருத்தை மகன்களிடம் கூட திணித்த தில்லை. அவர் தனக்கு அறிமுகமான எழுத்தாளர்களை அவர்களது இயற் பெயரைச் சொல்லி அழைப்பதில்லை. அவர்களைக் கெüரவிக்கும் வகையில் புனைப் பெயரைக் கூறியே அழைப்பார்.
எழுத்தாளர் தீப.நடராஜன்: சிற்றிலக்கியங்கள்தான் இலக்கியத்தைக் காப்பாற்றி வருகின்றன. பெரிய இதழ்கள் இலக்கியத்தை மட்டுமே சார்ந்து இருப்ப தில்லை. தினமணி நாளிதழ், இலக்கியத்திற்கென பக்கம் ஒதுக்கி தமிழ்மணியைத் தந்து கொண்டிருக்கிறது. இலக்கிய உலகில் தி.க.சி.க்கு தனி இடம் உண்டு.
சிற்றிதழ்கள் சங்கத் தலைவர் வதிலைபிரபா: அஞ்சல் துறையின் உள்ளூர் அதிகாரிகள் திடீர் திடீரென நூல் அஞ்சலுக்கு கட்டணத்தை உயர்த்தி வருகின்றனர். அந்தப் போக்கைக் கைவிட வேண்டும்.
எழுத்தாளர்.அரங்கமல்லிகா: ஒளவையாரின் சமூக சிந்தனையை யாரும் மறந்துவிட முடியாது. என்னை இலக்கிய உலகுக்கு அறிமுகம் செய்தது தினமணிதான்.
Posted by Unknown
Email This BlogThis! Share to X Share to Facebook

0 comments:

Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)
உங்கள் வலைப்பதிவில் vathilaipraba.blogspot.com இணைய இதழுக்கு இணைப்பு செய்திட கீழ்காணும் Script -ஐ Copy செய்து உங்கள் வலைப்பதிவுக்கான Script - ல் தேவையான இடத்தில் Paste செய்தால் போதும்....
<a href="http://www.vathilaipraba.blogspot.com" title="Create animated gif"><img src="http://www.loogix.com/img/res/1/3/0/7/2/4/13072420601084675.gif" alt="Create animated gif"/></a><br/><a href="http://www.vathilaipraba.blogspot.com/"></a>

எமது வலை தளத்தில் இணைப்பு செய்துவரும் வலைப் பதிவர்களுக்கு நன்றி..

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம்

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Vathilai Praba

  • தமிழ்முரசு Tamil Murasu
  • யவ்வனம்
  • SARVADESA TAMILER CENTER
  • காற்றுவெளி இதழ்
  • தி.க.சி
  • ஓவியா பதிப்பகம்
  • நெய்தல்
  • Muthukamalam.com
  • திரட்டி.காம் பதிவுகள்
  • தமிழ்ப் புத்தகம்
வதிலைபிரபா

உலகத்தமிழ்ச் சிற்றிதழ்கள் சங்க 6 -ஆவது மாநாடு - இலங்கை

இலங்கை சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு

Unknown
View my complete profile

Search Box



Highlight 3 'மகாகவி' இதழ்களை முழுமையாக வாசிக்க படத்தின் மீது 'click' செய்யுங்கள்.

Blogger Tips and Tricks
Highlight 2

Posts
Atom
Posts
Comments
Atom
Comments
Literature Blogs
Powered by Blogger.

Recent Comments

© வதிலைபிரபா - Designed by Theme.fm, Google blogs templates by Blog and Web.