2010 பிப்.21:
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் சிற்றிதழ்களுக்கு தனி அமர்வு, கண்காட்சி அரங்கம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி உலகத்தமிழ்ச் சிற்றிதழ்கள் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
உலகத் தமிழ்ச் சிற்றிதழ்கள் சங்க 5-வது மாநில மாநாடு குற்றாலத்தில் உள்ள திருவிதாங்கூர் அரண்மனையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
காலையில் நடைபெற்ற பொதுக்குழு அமர்வுக்கு சங்கத் தலைவர் கவிஞர் வதிலைபிரபா தலைமை வகித்தார். துணைப் பொதுச் செயலர் பாரதிவாசன், அமைப்புச் செயலர் திருவள்ளுவர் கா.நாராயணசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பொதுச்செயலர் கவிஞர் சொர்ணபாரதி ஆண்டறிக்கை யையும், பொருளாளர் நந்தவனம்சந்திரசேகரன் பொருள றிக்கையையும் வாசித்தனர். இலங்கை கிளை அறிக்கையை அதன் செயலர் அந்தனி ஜீவா சமர்ப்பித்தார்.
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட பிற தீர்மானங்கள்:
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை நடத்தும் தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்துக் கொள்கிறோம். இம் மாநாட்டின் மூலம் தமிழகத்தில் வீடுகள் தோறும் சங்க இலக்கியம் என்ற பெயரில் மலிவுப் பதிப்பில் அனைவருக்கும் சங்க இலக்கியத் தொகுப்பை அரசு வழங்க வேண்டும்.
மத்திய செம்மொழி ஆய்வு நிறுவனம் சிற்றிதழ்களுக்கு ரூ.30 ஆயிரத்தை 3 தவணைகளாக வழங்குகிறது. அதுபோல, தமிழக அரசும் தமிழ் வளர்ச்சித் துறை மூலம் ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும். அஞ்சல் துறையில் அவ்வப்போது உருவாக்கப்படும் எழுதப்படாத கெடுபிடிகளை, விதிமுறை களைக் களைய வேண்டும்.
2011 ஜனவரியில் கொழும்பில் நடைபெறும் உலகத் தமிழ் எழுத்தாளர் விழாவில் சிற்றிதழாளர்கள் கலந்துகொள்ள வேண்டும். இலங்கையில் அனைத்து தமிழ் மக்களும் சமஉரிமையும் அந்தஸ்தும் பெற்று, அமைதியுடன் வாழ மத்திய, தமிழக அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிற்றிதழாளர்களுக்கும் கலைமாமணி விருது வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.
மாநாட்டு அமைப்பாளர் சொக்கம்பட்டி ரஹீம் வரவேற்றார். ஜாஹிர் உசேன் நன்றி கூறினார். கண்காட்சி: அதைத் தொடர்ந்து சிற்றிதழ்கள் கண்காட்சியை மகாத்மா காந்தி சேவா மையநிறுவனர் வி.விவேகானந்தன் துவக்கிவைத்தார்.
சிற்றிதழ் குறித்த கருத்தரங்கம் உதயம் ராம் தலைமையில் நடைபெற்றது. தமிழ் மணவாளன், அ.சுபாஷ், பாரதி, சந்திரா மனோகரன், வாழைகுமார், அ.மண்ணுலிங்கம், அ.செல்வதரன் உள்ளிட்டோர் பேசினர்.
0 comments:
Post a Comment