உலகத் தமிழ்ச் சிற்றிதழ்கள் சங்கம், மகாகவி வாசகர் வட்டம், பதியம் திரைப்பட இயக்கம் மற்றும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, பெரியகுளம் வட்டம் ஆகியவை இணைந்து நடத்திய கவிதை நூல் வெளியீட்டு விழா 11-10-2009 ஞாயிறு அன்று காலை 10 மணி அளவில் தேனி ஹோட்டல் இன்டர்நேசனல் அரங்கில் நடைபெற்றது..
தேனி நாடார் சரஸ்வதி மகளிர் கல்லூரி செயலாளர் திரு.மு.அமர்நாத் தலைமை தாங்கினார். திரைப்பட இயக்குநர் திரு.ராஜமோகன் முதல் பிரதியை வெளியிட்டு சிறப்புரை நிகழ்த்தினார். தமுஎகச மாநில செயற்குழு உறுப்பினர் கவிஞர் இதயகீதன் முதல் பிரதியை பெற்றுக் கொண்டார். முன்னதாக உலகத் தமிழ்ச் சிற்றிதழ்கள் சங்கத் தலைவர் - ஓவியா பதிப்பக வெளியீட்டாளர் கவிஞர் வதிலைபிரபா வரவேற்றார். திருப்பூர் பதியம் திரைப்பட இயக்கம் கவிஞர் பாரதிவாசன், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் பெ.பரமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நூல் அறிமுகம் மற்றும் நிகழ்ச்சித் தொகுப்பினை உதசிச பொதுச்செயலாளர் கவிஞர் சொர்ணபாரதி வழங்கினார். புலவர் ப.தேவகுரு, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டார தலைவர் கவிஞர் ம.இளம்பரிதி, வட்டாரச் செயலாளர் த.கிருஷ்ணன், மகாகவி பொறுப்பாசிரியர் நகர வங்கி இராதாகிருஷ்ணன், மகாகவி வாசகர் வட்டத் தலைவர் பொன்.அண்ணாத்துரை, எழுத்தாளர் கருணைச்சாமி, தேனி வையைத் தமிழ்ச் சங்கம் நிறுவனர் ச.ந.இளங்குமரன், குறளரசு கழகம் மாவட்டத் தலைவர் ம.சுந்தரமூர்த்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நூலாசிரியர் கவிஞர் பெ.விஜயராஜ்காந்தி ஏற்புரை வழங்கினார்..
"குங்குமப் பூவும் கொஞ்சும் புறாவும்' திரைப்படம் குறித்த ரசிகர்களின் நேரடிக் கேள்விகளுக்கு படத்தின் இயக்குநர் இராஜமோகன் விளக்கம் அளித்தார். தொடர்ந்து இயக்கம் குறித்தான அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார். முடிவில் மகாகவி இதழ் ஓவியர் கவிஞர் ஜெ.சுதாகர் நன்றி கூறினார்..
தேனி நாடார் சரஸ்வதி மகளிர் கல்லூரி செயலாளர் திரு.மு.அமர்நாத் தலைமை தாங்கினார். திரைப்பட இயக்குநர் திரு.ராஜமோகன் முதல் பிரதியை வெளியிட்டு சிறப்புரை நிகழ்த்தினார். தமுஎகச மாநில செயற்குழு உறுப்பினர் கவிஞர் இதயகீதன் முதல் பிரதியை பெற்றுக் கொண்டார். முன்னதாக உலகத் தமிழ்ச் சிற்றிதழ்கள் சங்கத் தலைவர் - ஓவியா பதிப்பக வெளியீட்டாளர் கவிஞர் வதிலைபிரபா வரவேற்றார். திருப்பூர் பதியம் திரைப்பட இயக்கம் கவிஞர் பாரதிவாசன், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் பெ.பரமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நூல் அறிமுகம் மற்றும் நிகழ்ச்சித் தொகுப்பினை உதசிச பொதுச்செயலாளர் கவிஞர் சொர்ணபாரதி வழங்கினார். புலவர் ப.தேவகுரு, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டார தலைவர் கவிஞர் ம.இளம்பரிதி, வட்டாரச் செயலாளர் த.கிருஷ்ணன், மகாகவி பொறுப்பாசிரியர் நகர வங்கி இராதாகிருஷ்ணன், மகாகவி வாசகர் வட்டத் தலைவர் பொன்.அண்ணாத்துரை, எழுத்தாளர் கருணைச்சாமி, தேனி வையைத் தமிழ்ச் சங்கம் நிறுவனர் ச.ந.இளங்குமரன், குறளரசு கழகம் மாவட்டத் தலைவர் ம.சுந்தரமூர்த்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நூலாசிரியர் கவிஞர் பெ.விஜயராஜ்காந்தி ஏற்புரை வழங்கினார்..
"குங்குமப் பூவும் கொஞ்சும் புறாவும்' திரைப்படம் குறித்த ரசிகர்களின் நேரடிக் கேள்விகளுக்கு படத்தின் இயக்குநர் இராஜமோகன் விளக்கம் அளித்தார். தொடர்ந்து இயக்கம் குறித்தான அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார். முடிவில் மகாகவி இதழ் ஓவியர் கவிஞர் ஜெ.சுதாகர் நன்றி கூறினார்..
0 comments:
Post a Comment