skip to main | skip to sidebar
  • Home
  • குறிப்புகள்
  • கண்டதும், கேட்டதும்
  • கவிதைகள்
  • நூல் அறிமுகம்
  • படிவம்
  • முகவரிகள்
  • ஹைக்கூ
  • சிறுகதைகள்
  • பொது
வதிலைபிரபா


செய்திகள்

Loading...





உலகத்தமிழ்ச் சிற்றிதழ்கள் சங்க 5 -வது மாநாடு


2010 பிப்ரவரி 21 அன்று உலகத்தமிழ்ச் சிற்றிதழ்கள் சங்க 5 -வது மாநாடு - வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில் .தினமணி நாளிதழின் ஆசிரியர் திரு கே.வைத்தியநாதன் 

     மாநாட்டிற்கு முதுபெறும் எழுத்தாளர் தி.க.சி (தி.க.சிவசங்கரன்) அவர்கள், தினமணி நாளிதழின் ஆசிரியர் திரு கே.வைத்தியநாதன் அவர்கள், திரு.தீபநடராசன், திரு. கலாப்பிரியா, திரு.கழனியூரான், திரு. பூ.திருமாறன், இலங்கையைச் சேர்ந்த சிற்றிதழ் ஆசிரியர்களான அந்தனி ஜீவா, த.கோபாலகிருஷ்ணன், சேயன் இப்ராகிம் இன்னும் ஏராளமான சிற்றிதழ்களின் ஆசிரியர்கள், வாசகர்கள் என இலக்கிய கூடல் இனிதே நடந்தேறியது.

உலகத் தமிழ்ச் சிற்றிதழ்கள் சங்கத்தின் மாநாடு முடிந்த பின்னர் உற்சாகத்துடன் தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன். உடன் உலகத் தமிழ்ச் சிற்றிதழ்கள் சங்க தலைவர் வதிலைபிரபா, பொதுச்செயலாளர் சொர்ணபாரதி, பொருளாளர் நந்தவனம் சந்திரசேகரன், மாநாட்டு அமைப்பாளர்கள் சொக்கம்பட்டி ரஹீம், ஜாகிர் உசேன், இலங்கை கிளைச் செயலாளர் அந்தனி ஜீவா, இலங்கை கிளை பொருளாளர் த.கோபாலகிருஷ்ணன், செல்வதரன்.

ஒரு கடிதமடல் கண்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்ததோடு மன மகிழ்ச்சியோடு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இந்த மாநாட்டின் வெற்றிக்கு வித்திட்ட தினமணி ஆசிரியர் திரு.கே.வைத்தியநாதன் அவர்களுக்கு இந்த மாநாட்டு அமைப்பின் மூலம் நன்றி கூறிக்கொள்கிறோம்.
 தானும் ஒரு சிற்றிதழ் ஆசிரியராக தனது பத்திரிக்கை உறவை ஆரம்பித்த நெகிழ்ச்சியான அந்த காலம் முதல் சிற்றிதழ்களின் பங்களிப்பு வெகுசன பத்திரிக்கையால் தரமுடியாது என்பதை ஒப்புக்கொள்வதாக கூறினார்.
     தினமணி நாளிதழ் ஆசிரியர் கே.வைத்தியநாதன் அவர்கள் பேசும்போது சிற்றிதழ்களின் அயராத இலக்கிய பணியை, அதன் தாக்கத்தின் வீரியத்தையும் பற்றி தெளிவாக உணர்த்தினார். விளம்பரம் சார்ந்து வரக்கூடிய பத்திரிக்கைகள் எந்தக் கொள்கைக்காக முன்னெடுத்துச் செல்லவேண்டுமோ, அதை அடகு வைக்கும் நிர்பந்தமான சூழ்நிலைக்கு தள்ளப்படுவர். தான் ஆரம்பத்தில் சி்ற்றிதழ் ஆசிரியராக இருந்த அந்த சூழ்நிலையை விளக்கினார். அவர்களுக்கு இருக்கும் அந்த எழுத்து துணிச்சல் வெகுசன பத்திரிக்கைகளுக்கு இருக்காது என்பதை ஆணித்தரமாக கூறினார்.
     இலக்கிய உலகில் சிற்றிதழ்களின் வளர்ச்சி மிகவும் அவசியம் மிகத் தரமான படைப்புகளுடன் இன்னும் நிறைய சிற்றிதழ்கள் வரவேண்டும். தொடர்ந்து அவை வரவேண்டும். சிற்றிதழ்களின் மூலம் வளர்ந்தவர்கள் தான் இன்றைய பெரும் எழுத்தாளர் களாக இலக்கிய வானில் உலாவந்து கொண்டிருக்கிறார் கள். இவ்வாறு அவர் கூறினார்.
     உதசிசங்கத்தின் தலைவர் வதிலைபிரபா முன்வைத்த தீர்மானத்தில் ஒன்றான சிற்றிதழ் எழுத்தாளர்களுக்கும் கலைமாமணி விருது கொடுக்க வேண்டும் என்பதை மேற்கோள்காட்டி பேசிய தினமணி ஆசிரியர் நமக்கு இந்த விருதுகள் தேவையில்லை. முகம் தெரியாத வாசகர்கூட்டம் நமக்கு தரும் அங்கீகாரம் நோபல் பரிசுக்கு சமம். வழங்குவது கலைமாமணி விருது அல்ல சிரிப்பு நடிகர்களுக்கும், கவர்ச்சி நடிகர்களுக்கும் மத்தியில் நமது இலக்கியம் சிதறவேண்டாம். என்றார்.
Posted by Unknown
Email This BlogThis! Share to X Share to Facebook

0 comments:

Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)
உங்கள் வலைப்பதிவில் vathilaipraba.blogspot.com இணைய இதழுக்கு இணைப்பு செய்திட கீழ்காணும் Script -ஐ Copy செய்து உங்கள் வலைப்பதிவுக்கான Script - ல் தேவையான இடத்தில் Paste செய்தால் போதும்....
<a href="http://www.vathilaipraba.blogspot.com" title="Create animated gif"><img src="http://www.loogix.com/img/res/1/3/0/7/2/4/13072420601084675.gif" alt="Create animated gif"/></a><br/><a href="http://www.vathilaipraba.blogspot.com/"></a>

எமது வலை தளத்தில் இணைப்பு செய்துவரும் வலைப் பதிவர்களுக்கு நன்றி..

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம்

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Vathilai Praba

  • தமிழ்முரசு Tamil Murasu
  • யவ்வனம்
  • SARVADESA TAMILER CENTER
  • காற்றுவெளி இதழ்
  • தி.க.சி
  • ஓவியா பதிப்பகம்
  • நெய்தல்
  • Muthukamalam.com
  • திரட்டி.காம் பதிவுகள்
  • தமிழ்ப் புத்தகம்
வதிலைபிரபா

உலகத்தமிழ்ச் சிற்றிதழ்கள் சங்க 6 -ஆவது மாநாடு - இலங்கை

இலங்கை சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு

Unknown
View my complete profile

Search Box



Highlight 3 'மகாகவி' இதழ்களை முழுமையாக வாசிக்க படத்தின் மீது 'click' செய்யுங்கள்.

Blogger Tips and Tricks
Highlight 2

Posts
Atom
Posts
Comments
Atom
Comments
Literature Blogs
Powered by Blogger.

Recent Comments

© வதிலைபிரபா - Designed by Theme.fm, Google blogs templates by Blog and Web.