சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு- 2011 (3ஆம் நாள் அமர்வு)
நான்கு நாட்களாகக் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் கோலாகலமாக நடைபெற்ற சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டின் 3ஆம் நாள் (08/09.01.2011) அமர்வு பற்றிய விபரங்கள் வருமாறு:
வரதர் அரங்கு
'சிற்றிதழ்'
சுப்பிரமணி மாலதி மண்டபத்தில் இடம்பெற்ற இந்த அமர்வுக்கு இணைத்தலைவர்களாக திரு. சொர்ணபாரதி (இந்தியா- பொதுச் செயலாளர் உலக தமிழ்ச் சிற்றிதழ்கள் சங்கம்), திரு. இரா. நாகலிங்கம் (அன்புமணி- மூத்த எழுத்தாளர்) ஆகியோரும், இணைப்பாளராக செங்கதிரோன் த. கோபாலகிருஷ்ணனும் (ஆசிரியர் -'செங்கதிர்') பணியாற்றினர். இந்த அமர்வில் திரு. டொமினிக் ஜீவா (ஆசிரியர் - மல்லிகை), திரு. எஸ். பி. கனகசபாபதி (கல்கிதாசன் - கனடா) ஆகியோர் ஆய்வு மதிப்பீட்டாளர்களாகச் செயலாற்றினர்.
ஆய்வுரைகள்:
1. இலங்கைச் சிற்றிதழ்களின் - வரலாறும் வளர்ச்சியும் - தெளிவத்தை ஜோசப் (மூத்த எழுத்தாளர்)
2. இலங்கையில் முஸ்லிம்கள் வளர்த்த சிற்றிதழ்கள் - கலாபூஷணம் கவிஞர். ஏ. இக்பால்
3. தமிழகச் சிற்றிதழ்கள் - மணிக்கொடி முதல் மகாகவி வரை - திரு. வதிலைபிரபா (தலைவர். உலகத் தமிழ்ச் சிற்றிதழ்கள் சங்கம்)
4. ஈழத்தில் வெளிவரும் கலை இலக்கியச் சிற்றிதழ்கள் - திரு. க. பரணீதரன் ('ஜீவநதி' – ஆசிரியர்)
5. மலையகத் தமிழ்ச் சஞ்சிகைகள்: ஒரு மதிப்பீடு - இரா. சர்மிளாதேவி (ஆசிரியர். திருத்துவக் கல்லூரி, கண்டி)
6. இலத்திரனியற் சூழலில் புகலிடச் சிற்றிதழ்கள் - திரு. சு. குணேஸ்வரன்
7. ஈழத்துச் சிறு சஞ்சிகைகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் - டாக்டர் தி. ஞானசேகரன் ('ஞானம்' – ஆசிரியர்)
8. அவுஸ்திரேலியச் சிற்றிதழ்கள் - திரு. எஸ். கிருஸ்ணமூர்த்தி
9. பிரான்ஸ் நாட்டின் சிற்றிதழ்கள்- ஒரு நோக்கு - திரு. வி. ரி. இளங்கோவன் (பிரான்ஸ்)
10. தமிழ் இணைய இதழ்கள் - திரு. க. பட்டாபிராமன் (இந்தியா - அரிமா பொறியியலாளர்)
ஆய்வுரைகளை அடுத்து க. பட்டாபிராமனால் பன்னாட்டுத் தமிழ் இதழ்கள் குறுந்தகடுக் காட்சியும் ஒழுங்கு செய்யப்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment